Mar 22, 2024
, , ,
Movie - Amarkalam
Music - Bharadwaj
Lyrics - Vairamuthu
Singer's - S. P. Balasubrahmanyam, Sujatha Mohan

பெண் : { சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன்... யுத்தம்
இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும்
வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம்
கேட்டேன் } (2)

ஆண் : சத்தம் இல்லாத
தனிமை கேட்டேன் யுத்தம்
இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும்
வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம்
கேட்டேன்

ஆண் : உயிரைக் கிள்ளாத
உறவைக் கேட்டேன் ஒற்றைக்
கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை
கேட்டேன் வயதுக்குச் சரியான
வாழ்க்கை கேட்டேன்

ஆண் : இடிகள் இல்லாத
மேகம் கேட்டேன் இளமை
கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம்
கேட்டேன் பாசாங்கில்லாத
பாசம் கேட்டேன்

ஆண் : புல்லின் நுனியில்
பனியைக் கேட்டேன் பூவின்
மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக்
கேட்டேன் தலையைக் கோதும்
விரலைக் கேட்டேன்

ஆண் : நிலவில் நனையும்
சோலை கேட்டேன் நீலக்
குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை
கேட்டேன் கிடந்து உருளப்
புல்வெளி கேட்டேன்

ஆண் : தொட்டுப் படுக்க
நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீன்
கேட்டேன் துக்கம் மறந்த
தூக்கம் கேட்டேன் தூக்கம்
மணக்கும் கனவைக் கேட்டேன்

ஆண் : பூமிக்கெல்லாம்
ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள்
கேட்டேன் மனிதர்கெல்லாம்
ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம்
தாய்மொழி கேட்டேன்

ஆண் : உலகுக்கெல்லாம்
சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு
நதி கேட்டேன் வானம்
முழுக்க நிலவைக்
கேட்டேன் வாழும்
போதே சொர்க்கம்
கேட்டேன்

ஆண் : எண்ணம்
எல்லாம் உயரக்
கேட்டேன் எரியும்
தீயாய் கவிதை
கேட்டேன் கண்ணீர்
கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம்
கேட்டேன்

ஆண் : சுற்றும் காற்றின்
சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின்
சிறகைக் கேட்டேன்
உச்சந் தலை மேல்
மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக்
கேட்டேன்

ஆண் : பண்கொண்ட
பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம்
கேட்டேன் நன்றி கெடாத
நட்பைக் கேட்டேன் நடுங்க
விடாத செல்வம் கேட்டேன்

ஆண் : மலரில் ஒரு
நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம்
ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக்
கேட்டேன் நினைவில் சந்தனம்
மணக்கக் கேட்டேன்

ஆண் : விழுந்தால்
நிழல் போல் விழவே
கேட்டேன் அழுதால்
மழை போல் அழவே
கேட்டேன் ஏகாந்தம்
என்னோடு வாழக்
கேட்டேன் எப்போதும்
சிரிக்கின்ற உதடுகள்
கேட்டேன்

ஆண் : பனித்துளி
போல் ஒரு சூரியன்
கேட்டேன் சூரியன்
போல் ஒரு பனித் துளி
கேட்டேன் ராஜராஜனின்
வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய
கோலைக் கேட்டேன்

ஆண் : பாரதியாரின்
சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த
வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக்
கேட்டேன் மதுரை மீனாட்சி
கிளியைக் கேட்டேன்

ஆண் : சொந்த
உழைப்பில் சோறை
கேட்டேன் தொட்டுக்
கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற
பொறுமையை கேட்டேன்
புல்லைப் போன்ற
பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற
துணிவைக் கேட்டேன்

ஆண் : இடியைத்
தாங்கும் தோளை
கேட்டேன் இழிவைத்
தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக்
கேட்டேன் தொலைந்து விடாத
பொறுமையை கேட்டேன்

ஆண் : சொன்னது
கேட்கும் உள்ளம்
கேட்டேன் சொன்னால்
சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள்
கேட்டேன் காலம் கடக்கும்
கால்கள் கேட்டேன்

ஆண் : சின்ன சின்னத்
தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம்
கேட்டேன் மூடியில்லாத
முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை
கேட்டேன்

ஆண் : தவழும் வயதில்
தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள்
கேட்டேன் ஐந்து வயதில்
புத்தகம் கேட்டேன் ஆறாம்
விரலாய் பேனா கேட்டேன்

ஆண் : காசே வேண்டாம்
கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம்
தாய்மடி கேட்டேன் கூட்டுக்
கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்த பட்ச அன்பைக்
கேட்டேன்

ஆண் : இத்தனை கேட்டும்
கிடைக்கவில்லை இதிலே
எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம்
என்று மரணம் மரணம் மரணம்
கேட்டேன்

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more