திருப்பதி பிரமோற்சவம் த்வஜாரோஹணம் | ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோற்சவம் 2022 | Dwajarohanam in Tirumala in a Part of Srivari Brahmotsavam...2022 | Tirumala Tirupati Brahmotsavam festival 2022 |

#SrivariBrahmotsavam2022 #VasanthTV #Srivari #Brahmotsavam #Dhwajarohanam #VasanthTVLive #VasanthTVExculsive #TTDLive #ThirumalaTirupati #BrahmotsavamLive #DhwajarohanamLive #திருப்பதி #ஸ்ரீவாரிபிரம்மோற்சவம் #த்வஜாரோஹணம்



ஸ்ரீவெங்கடேஸ்வரா சுவாமி வாரி பிரம்மோற்சவம் அல்லது ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர விழாவாக திருப்பதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த விழா, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் இந்து மாதமான புரட்டாசி கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவின் போது கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பல வாகனங்களில் வெங்கடாசலபதி சுவாமி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வெங்கடாசலபதி மற்றும் அவரது துணைவியார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோரின் உற்சவ மூர்த்தி சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்படும் விழாவினைக் காண இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி வருகின்றனர்.

பிரம்மோற்சவம் என்பது பிரம்மாவினை பெருமைப்படுத்தும் விதமாக, நடைபெறும் விழாவாகும். இது திருமலையில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரிய விழாவாகும்.
ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தை "வெங்கடேஸ்வர சலகத்லா பிரம்மோற்சவங்கள்" மற்றும் "வெங்கடேசுவர நவராத்திரி பிரம்மோற்சவங்கள்" என்றும் அழைக்கின்றனர்.

நவராத்திரிக்கு இணையாக நடைபெறும் இந்த பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் முதல் நாளுக்கு முந்தைய மாலையில், அங்குராப்பன சடங்கு (வளமையினைக் குறிக்கும் வகைகள் விதைகளை விதைத்தல்) செய்யப்படுகிறது.
பிரமோற்சவ முதல் நாள் கருடக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீன இலக்கனத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுவது வழக்கம் (துவாஜாரோகணம்).

இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றமே சகல தேவதைகளையும், அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முப்பத்து முக்கோடி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தைக் காண்பதாக ஐதீகம். இந்நிகழ்விற்கு பின் ஆந்திர பிரதேச முதலமைச்சர், புதிய பட்ட்டாடைகளை கோயிலுக்கு வழங்குவார்.

இந்த திருவிழாவின் போது தினந்தோறும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி தேவியர் சமேதராய் அலங்கரிக்கப்பட்ட 16 வாகனங்களில் நான்கு மாட வீதிகளிலும் வீதியுலா வருவார்.

ஆறாம் நாளன்று அனுமந்த வாகன சேவை நடைபெறும். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவையும் தேரோட்டமும் அமைகின்றது.
இத்தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள். திருவிழாவின் இறுதி நாள் வெங்கடேஸ்வரரின் பிறந்த நட்சத்திரத்தை நினைவுகூர்கிறது. சுதர்சன சக்கரம் கோவில் தெப்பக்குளத்தில் நீராட்டப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் இறைவனின் அருளினைப்பெறுகிறார்கள். கருடக் கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிகிறது.



Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more